Monday, May 16, 2016

நீ

கொட்டும் மழை வெளியே
சாய் நாற்காலி, நல்லத் தமிழ் நாவல்
கொதிக்கும் தேநீர்
கொறிக்க ஏதேனும்
இவையெல்லாம் இல்லை என்றால் என்ன..?
உன்னை அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்
மழையைப் பார்த்தபடி.
****

பொங்கி விழுந்து
உன்னிடம் கலக்கும்
உன்னதப் பொழுதுகளில்
மந்திரம் போல்
உச்சரித்துக் கிடக்கிறேன்
உன் பெயரை.
*****


எப்போது விழுந்தாலும்
முதல் தூறலுக்கு
சிலிர்க்கும்
உன் வருகை தரும்
உவகைப் போல்
*****

என்றும் போல் அழகாகத் தான்
வந்தாய்
ஒரு உடனடி கவிதையை
உள்ளிருந்து கிளப்பும்
அளவிற்கு...!
*****



உன் போலத்தான் இந்த கவிதையும்.
தூரமாய் நின்று கொண்டு
தொந்தரவு செய்கிறது.

எண்ணமாய் மனதில் நிரம்பி
காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி
சவால் விடுகிறது.

நெருங்கி அருகில் வர
சொல்லிழக்க வைக்கிறது.

எனக்காய் வசப்படுத்த எத்தனிக்கையில்
முரண்டு பிடிக்கிறது.

‘சாி, வேண்டாம் போ ‘ என்றிருந்தால்
கிட்ட வந்து கொஞ்சுகிறது.

சட்டென்று இழுத்து என்னருகில்
இருத்திக் கொள்ள

கைகளில் மலர்கிறது
மிக அழகாய்.





http://old.thinnai.com/?p=30205124

No comments: