கொட்டும் மழை வெளியே
சாய் நாற்காலி,
நல்லத் தமிழ் நாவல்
கொதிக்கும்
தேநீர்
கொறிக்க
ஏதேனும்
இவையெல்லாம்
இல்லை என்றால் என்ன..?
உன்னை
அழைத்துப் பேசிக்கொண்டிருக்கிறேன்
மழையைப் பார்த்தபடி.
****
*****
உன் போலத்தான் இந்த கவிதையும்.
****
பொங்கி விழுந்து
உன்னிடம் கலக்கும்
உன்னதப் பொழுதுகளில்
மந்திரம் போல்
உச்சரித்துக்
கிடக்கிறேன்
உன் பெயரை.*****
எப்போது
விழுந்தாலும்
முதல் தூறலுக்கு
சிலிர்க்கும்
உன் வருகை தரும்
உவகைப் போல்
உவகைப் போல்
*****
என்றும்
போல் அழகாகத் தான்
வந்தாய்
ஒரு
உடனடி கவிதையை
உள்ளிருந்து
கிளப்பும்
அளவிற்கு...!
*****
உன் போலத்தான் இந்த கவிதையும்.
தூரமாய் நின்று கொண்டு
தொந்தரவு செய்கிறது.
எண்ணமாய் மனதில் நிரம்பி
காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி
சவால் விடுகிறது.
நெருங்கி அருகில் வர
சொல்லிழக்க வைக்கிறது.
எனக்காய் வசப்படுத்த எத்தனிக்கையில்
முரண்டு பிடிக்கிறது.
‘சாி, வேண்டாம் போ ‘ என்றிருந்தால்
கிட்ட வந்து கொஞ்சுகிறது.
சட்டென்று இழுத்து என்னருகில்
இருத்திக் கொள்ள
கைகளில் மலர்கிறது
மிக அழகாய்.
http://old.thinnai.com/?p=30205124
தொந்தரவு செய்கிறது.
எண்ணமாய் மனதில் நிரம்பி
காகிதத்தில் எழுதி வைக்கச்சொல்லி
சவால் விடுகிறது.
நெருங்கி அருகில் வர
சொல்லிழக்க வைக்கிறது.
எனக்காய் வசப்படுத்த எத்தனிக்கையில்
முரண்டு பிடிக்கிறது.
‘சாி, வேண்டாம் போ ‘ என்றிருந்தால்
கிட்ட வந்து கொஞ்சுகிறது.
சட்டென்று இழுத்து என்னருகில்
இருத்திக் கொள்ள
கைகளில் மலர்கிறது
மிக அழகாய்.
http://old.thinnai.com/?p=30205124
No comments:
Post a Comment